பகுதி அ.2.அகர வரிசையில் அடுக்குதல்
உங்களிடம் சில ஆங்கில வார்த்தைகளை கூறிவிட்டு அவற்றை alphabetical ஆக அடுக்கச் சொன்னால் எளிதாக செய்து விடுவீர்கள் அல்லவா . இங்கு நான்கு தமிழ் வார்த்தைகள் கொடுக்கப்பட்டிருக்கும், நீங்கள் அவற்றை 'அகர' வரிசையாக அடுக்க வேண்டும்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை :
முதலில் அ.ஆ.இ.ஈ...என்பதான உயிர் எழுத்துக்களில் துவங்கும் வார்த்தைகளை அடுக்க வேண்டும்.
இரண்டாவது க், ,ங், ச்,ட் ...என்கிறதான மெய்யெழுத்துக்கள் இருக்கிறதா என பார்க்கவும், மெய்யெழுத்துகள் இருந்தால் அவற்றின் அகர வரிசையை குறித்துக்கொள்ளவும்.
மூன்றாவதாக க, கி, கு, கூ, கெ,கே.....என உயிர்மெய் எழுத்துக்களை அடுக்கவும்.
குழப்பமாக இருக்கிறதா ? ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்,
அன்பு, கோலம், கொலை, உண்டி - இவற்றை அகர வரிசையில் அடுக்குக என்பதாக ஒரு கேள்வி வந்தால், அன்பு, உண்டி, கொலை, கோலம் என்பதாக அடுக்க வேண்டும்.
பின்வருபவற்றை அகர வரிசையில் அடுக்கவும் ?
உரல், இலை, ஆடு, ஏணி, ஒட்டகம், காவல்
விடை : ஆடு, இலை, உரல், ஏணி, ஒட்டகம், காவல்
இவ்வகை கேள்விகளை நீங்கள் எளிதாக எதிர்கொள்ள வேண்டுமானால் , ஒன்றாம் வகுப்பில் படித்த உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய் எழுத்து வரிசையினை ஒருமுறை நினைவு படுத்திப் பாருங்கள்.
0 comments:
Post a Comment